Friday 17th of May 2024 04:42:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
திருத்தப்பட்ட சீனாவின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  ஹொங்கொங்கில் இன்று முதலாவது நபா் கைது!

திருத்தப்பட்ட சீனாவின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங்கில் இன்று முதலாவது நபா் கைது!


திருத்தப்பட்ட சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹொங்கொங்கில் இன்று முதலாவது கைது இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தேசிய ஒருமைப்பாட்டை மீறி ஹொங்கொங் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் சுலோக அட்டையைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் நேற்று அங்கீகரிக்கப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திருத்தத்தின் கீழ் முதல் நபராகக் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

ஹொங்கொங் தொடா்பில் திருத்தப்பட்ட சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்ட ஏற்பாடுகளின் கீ்ழ் சீனாவின் தேசிய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படுவோருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுபட்டதைக் குறிக்கும் 23 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று நகரில் திரண்ட ஜனநாயகப் போராட்டக்காரா்கள் ஹொங்கொங் விடுதலையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீனாவின் புதிய சட்டத்திருத்தத்துக்கு அவா்கள் கடும் எதிா்ப்பு வெளியிட்டனா்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களை பொலிஸாா் விரட்டியடித்தனா்.

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஹொங்கொங்1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்போது ஹொங்கொங்கிற்று விசேட தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஹொங்கொங்கின் தன்னாட்சி உரிமையை புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீனா மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஹொங்கொங் தன்னாட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில்அது சீனாவின் ஒரு பகுதியாகவே இனிக் கருதப்பட்டு, விசேட சா்வதேச ஒத்துழைப்புக்கள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மைக்கு இந்தச் சட்டம் உதவும் என பீஜிங்கின் ஆதரவு பெற்ற ஹொங்கொங் அரசியல் தலைவா் கேரி லாம் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE